ஜெகதேவி
என் தேசக் காற்றும் என் தோட்டப் பூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா
நான் வாழ்ந்த வீடும் நாம் ஆண்ட நாடும்
நாம் பேசும் மொழியும் நமக்கில்லையா
நாம் என்ன பாவம் யாருக்குச் செய்தோம்
தாய் தந்தையோடோர் வாழ்வில்லையா
என் தேசக் காற்றும் என் தோட்டப் பூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா
ரமேஸ்
அலை.....................
அகதி வாழ்வு தந்த வேதனையைச் சொல்லு..
ஜெகதேவி
ஓர் கோடி மக்கள் ஊர் கூடி வாழ்ந்த
அந்................................. நின்றோம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேதி
நம் காதில் நுழைய தலை குனிந்தோம்
கண்முன் எம் தேசம் கண்ணீரில் நனைய
கண்மூடி நாம் ஏன் ஓடி வந்தோம்.
கல்லூரி வாழ்வைக் காற்றோடு விட்டு
கை காட்டி நாம் ஏன் ஏறி வந்தோம்
என் தேசக் காற்றும் என் தோட்டப் பூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா
ரமேஸ்
சனங்கள் யாருக்குத்தான் ஊருக்குப் போக........
கவலை.........எனக்கும் .............. பாட்டுப் பாட ஆசை[/color]
ஜெகதேவி
போர் கொண்ட பூமி யார் தந்த சாபம்
பூங்காற்றில் கூட செங்குருதியின் நாற்றம்
வாழ்வோடு நாளும் சாவோடு சேதி
வான் மூடும் பூமி வழி விடுமா
பொன்னான பூமி முன்னேற நாளும்
அன்போடு நாங்கள் வழி செய்வோம்
எம்மோடு போகும் மண்ணோடை தோசம்
நாளை நம் தலைமுறை வளம் பெறட்டும்.
பாடல்வரிகள் - ???????
பாடியவர்கள் - ரமேஸ், ஜெகதேவி.விக்னேஸ்வரன்
இசை - மோகன்ராஜ்
