ஈழம் எங்கள் தாயகம்
என்றும் வாழும் ஆலயம்
வாழும் காலம் யாவும் எங்கள்
உயிரைத் தந்தும் காத்திடுவோம்
வீரர்கள் என்றும் சாவதில்லை
சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை
தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை
வெற்றியின் படியில் ஏறுகின்றோம்
எங்களின் தியாக வித்துக்கள்
நிட்சயம் ஒரு நாள் பயிராகும்
எங்களின் கனவுகள் நனவாகும்
ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும்
தடைகள் கோடி என்றாலும்
படைகள் தேடி வந்தாலும்
விடைகள் எங்கள் தோள்களிலுண்டு
விடியும் ஒரு நாள் வாருங்கள்
நாளை மலரும் ஈழத்திலே
சுதந்திர மலர்கள் மொட்டவிழும்
இன்றைய எங்கள் போராட்டம்
முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும்.
நன்றி - நிதர்சனம் வெளியீடு - 9 (கூவு குயிலே)
Abonnieren
Kommentare zum Post (Atom)

0 Kommentare:
Kommentar veröffentlichen