கடலே எழுந்தே வீழ்ந்ததே
மலிந்தே உடல்கள் மிதந்ததே
எங்கள் துயர் அறிந்திருந்தாய்
இருந்தும் ஏன் தேம்ப வைத்தாய்
உந்தன் மடி வாழும் தீவை
உதறி ஏன் உடைய வைத்தாய்
தாயாக நீயிருந்தாய்
தண்ணீரில் மூழ்கடித்தாய்
தீராத சாபம்தானோ
வேதனை முடிவது முறையல்லவோ
ஆயிரம் குண்டுகள்தாண்டி
அலையின் பிடியில் மடிவதா
ஆயிரம் கால தேசம்
அரை நொடியில் அழிவதா
உனைக் காக்க உயிரைத் தந்தோம்
உன் கையால் சாவதா
இருந்தாலும் வீழ்ந்தே எழுவோம்
தமிழ் வீழ்ந்து போவதா
தேசத்தின் கரங்கள் சேர்த்தே
நெஞ்சத்தில் நின்றாடும் சோகங்கள் தீர்ப்போம்
Abonnieren
Kommentare zum Post (Atom)

1 Kommentare:
nenjsu kanakkiRathu! ARuthal solla vArththaikaLE illai.
enRenRum anbudan
BALA
Kommentar veröffentlichen