கண்கள் போனதய்யா ராசா
யார் கண்கள் பட்டதய்யா ராசா
விதி வந்து சேர்ந்ததோ
மலர் கொய்து சென்றதோ
சாகும் வயதிலே நானிருக்க இளம்
குருத்து உன்னை தீயில் போடுவதோ
கொள்ளி எனக்கு நீ போடாமல்
இறுதி கடன் மறந்து உதிர்ந்தாயோ
என் கண்கள் போனதய்யா ராசா
யார்கண்கள் பட்டதய்யா ராசா
படலையில் தினம் காத்திருப்பேன்
பள்ளி சென்று நீ திரும்பும் வரை
சுடலைக்கு உன்னை அனுப்புவேனோ
சோதனை ஏனனை ராசாவே
பகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே
சுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே
உன்னைப்போலொரு வீரன் நான் பெறவே
என்ன தவம் செய்தேன் ராசாவே
என்ன தவம் செய்தேன் ராசாவே
Abonnieren
Kommentare zum Post (Atom)

1 Kommentare:
தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
Kommentar veröffentlichen