பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
பாடல் காட்சியில் - சுஜீத்.ஜீ + சந்தோஷ்

சுஜீத்.ஜீ
வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்
வீதியிலே நடக்கிறேன் விதியை நினைக்கிறேன்
தமிழனாய்ப் பிறந்து நான் தினமும் தவிக்கிறேன்
எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை
எங்கள் மண்ணில் ஏது இல்லை இருந்தும் ஏதும் இல்லை
தினம் தினம் உயிர்க்கொலை உயிர்க்கு மதிப்பில்லை
இன்று இருப்பவர் நாளை இறப்பார் தெரியவில்லை
நாட்டை எண்ணித் துடிக்கிறேன் மனதில் வெடிக்கிறேன்
இன்ரநெற்ரை திறக்கிறேன் செய்திகள் படிக்கிறேன்
முழுவதும் வதை கொலை இல்லையா விடுதலை
மேற்குலகை நினைக்கையில் வளர்வை வியக்கிறேன்
தாயகத்தை நினைக்கையில் உள்ளே நான் அழுகிறேன்
விடுதலை விடுதலை என்றுதான் விடுதலை
தமிழ் வாழ நாடு இல்லை அவர்க்கு நாடு இல்லை
அரசியல் பேசவில்லை அவ்வறி வெனக்கில்லை
மனிதனாய்ப் பேசுகிறேன் கண்ணீரை வீசுகிறேன்
எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை
வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்
போர் வந்தாக் கிடைக்குமே விடுதலை - சும்மா
வாயைப் பிளந்திருந்து பயனில்ல - நாங்க
ஆழப் பிறந்தவர்கள் மறக்கல்ல - நெஞ்சில்
கோழைத் தனத்தோட நாம் பிறக்கல்ல - அந்த
போரை விரும்பி நாங்க அழைக்கல்ல - முடிவு
போரில் வந்தா அதைத் தடுக்கல்ல - எமக்கு
வேணும் எப்படியோ விடுதலை - அதை
தேடி எடுத்த பின்தான் மறுவேல ஏய்...
வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்
அமைதி அழிந்து போனதால் துடிக்கிறேன் - எங்கே
தேடிச்சென்று பெறலாமோ தவிக்கிறேன்
ஊரெல்லாம் போரினால மூடப்பட்டுக் கிடக்குது - தினமும்
அங்கே இங்கே அழிவுகள் நடக்குது - நாங்க
காத்திருந்தா இனியில்லை விடுதலை - வெறியர்க்
கிரையாவோம் அதுதானா இனிநிலை - ஒளிந்து
ஒடிச்செல்ல புலி ஒண்டும் எலி இல்லை
தமிழ் ஈழம் வெல்வோம் அதுதானே விடுதலை
வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்
சுஜீத்.ஜீ

1 Kommentare:
inthapaadalkalai enaku haramudiyumaa?
rahini
Kommentar veröffentlichen