Album - Singles
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
விடை சொல் கண்ணே சிறகா சிறையா
பதில் சொல் பெண்ணே வரமா வலியா
புயல் வந்து ஓய்ந்து போகும்
மழை வந்து காய்ந்து போகும்
எதுவேதான் வந்து போயினும் காதல் அழியாதே
புதிர்போடும் உன்தன் பெண்மை
புரியாதோ என்றும் உண்மை
பலியாக அடியே பெண்ணே என்னைக் கொல்லாதே
நதி சேரும் கடலின் மேலே
உருவாகும் துளியைப் போலே
அன்பே நான் உன்னைச் சேர
துடிதுடியாய் துடித்தேன் அழகே
வண்ணாத்திப் பூச்சி மேலே
சேர்ந்துள்ள ரேகைபோலே
அறியாத விதியை நானும்
எண்ணி எண்ணித் தவித்தேன் அழகே
அன்பே நீ தென்றல் போலே
விதிசொல்லும் ரேகை மேலே
உள்ளோடும் உண்மை தன்னை
சொன்னால் நீயும் பிழைப்பேன் அழகே
நில் நில் என்தன் அன்பே
நான் நான் உன்னைச் சேரும்
நாள் நாள் வருமா என்று
விடை சொல் கண்ணே சிறகா சிறையா
பதில் சொல் பெண்ணே வரமா வலியா
எதுவேதான் வந்துபோயினும்
எதுவேதான் சென்றுபோயினும்
அழியாத காதல் உன்மேல் அன்பே நில்லாதே
தலை சூடும் மல்லிப் பூவை
கலைப்பாளே வண்ணப் பாவை
அதுபோலே என்னை நீயும் கீழே தள்ளாதே
அழகான பூமியோடே
சேர்ந்தோடும் நிலவைப் போலே
உயிரே உன் உள்ளம் சேர
தவிதவியாய்த் தவித்தேன் உயிரே
நீண்டோடும் வானத்தோடே
அளவில்லா விண்மீன் போலே
புரியாத உன்தன் உள்ளம்
அறிய அறிய தவித்தேன் அழகே
அதிகாலை சூரியன் வந்து
ஒரு சேர்க்கும் ஒளியைப் போலே
தெளிவான அன்பைத் தந்தால்
அதனை நானும் ருசிப்பேன் அழகே
வா வா என்தன் அன்பே
நான் நான் உன்னைச் சேரும்
நாள் நாள் வருமா என்று
நடைபோடும் பெண்ணே புரியாத புதிர்தானா
விடைதன்னை நானும் அறிவேனா அறிவேனா.
2006-09-02
Abonnieren
Kommentare zum Post (Atom)

0 Kommentare:
Kommentar veröffentlichen